
கோலாலம்பூரில் மின்சார ஸ்கூட்டர் என்னும் இ-ஸ்கூட்டர்களின் பயன்பாடு அதிகரித்திருப்பதால், இதை ஒழுங்குபடுத்துவதற்கான துணைச் சட்டத்தை அரசாங்கம் விரைவில் அறிமுகப்படுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்தாதுள்ளார்.
கோலாலம்பூர் சாலைகளில் eScooter பயன்பாடு அதிகரித்துவரும் இந்த நேரத்தில், இந்த இலகுரக வாகன பயன்பாடு குறித்து தெளிவான வழிகாட்டுதல்கள் இல்லை.
2020 ஆகஸ்டில் திருத்தம் செய்யப்பட்ட 1987 சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்படி, பொது இடங்களிலும் சாலைகளிலும் இத்தகைய வாகனங்களைப் பயன்படுத்த ஒழுங்குமுறையும் வழிகாட்டியும் தேவையென சியோங் மேலும் தெரிவித்தார்.
