
யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பால் ஏற்பட்டுள்ள உணவு நெருக்கடியால் இந்த உலகம் ‘மானிடப் பேரழிவை’ சந்தித்து வருவதாக, உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பஸ் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடி தொடர்ந்தால், உணவுப்பொருட்கள் தாறுமாறாக விலை ஏற்றம் கண்டு, மில்லியன்கணக்கிலான மக்கள் வறுமை மற்றும் ஊட்டச்சத்தின்மையை நோக்கித் தள்ளப்படுவார்கள் என டேவிட் மால்பஸ் எச்சரித்துள்ளார்.
கடந்த இரு மாதங்களாக நீடிக்கும் போரினால், உணவுப்பொருட்களின் விலையில் உலக அளவில் 37% அளவுக்கு உயர்வு ஏற்படும் எனவும் மாணவர்களின் கல்வியிலும் இது பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்றும்
உலக வங்கி அவதானித்துள்ளது.
