26.4 C
Kuala Lumpur
Tuesday, April 28, 2026

Vetri

வெளிநாட்டு மாணவிமீது தாக்குதல்:
-இருவர்மீது போலீஸ் வேட்டை

வெளிநாட்டு மாணவிமீது தாக்குதல் நடத்திவிட்டு தப்பித்த இருவரை போலீசார் தேடி வருவதாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் Beh Eng Lai தெரிவித்துள்ளார்.

கோலாலம்பூர், டூத்தா மாஸ்-இல் இடம்பெற்ற இந்தச் சம்பவத்தின்போது, தப்பி ஓடிய மாணவின் முதுகில் கழியால் அடித்துள்ளனர்.

பெர்சியாரான் டூத்தாமாஸ், Kiaramas தேசிய இடைநிலைப் பள்ளி அருகில் நடைபெற்ற இந்தச் சம்பவத்தின்போது, பள்ளியின் காவலர் வாயில் காதவைத் திறந்துவிட்டு சம்பந்தப்பட்ட மாணவியையும் அவரின் தோழியையும் தப்பிக்க வைத்த நிலையில், தாக்குதல் நடத்தியவர்கள் மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இந்தச் சம்பவம் குறித்து, பீனல் கோடு சட்டப்பிரிவுகள் 323, 393 ஆகியவற்றின்கீழ் குற்றச்சாட்டு பதிவுசெய்யப்பட்டு தேடுதல் வேட்டை தொடர்வதாக காவல் துறை மேலும் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles