
கோவிட்-19 பெருந்தொற்று தொடங்கியது முதல் நாட்டில் இன்னமும் நடைமுறையில் இருக்கும் நடமாட்ட கட்டுப்பாட்டு முறையில், மெலும் தளர்வு அறிவிக்கப்படலாம். அதன் தொடர்பில், இன்னும் சில வாரங்களில் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் அறிவிப்பு செய்வாரென எதிர்பார்க்கப்படுகிறது. பொதுவிடத்தில் முகக் கவசம் அணிவது தொடர்பான தளர்வையும் அந்த அறிவிப்பு உட்படுத்தியிருக்குமென நம்பப்படுகிறது.
