
கெடா, Bandar Baharu விலுள்ள Relau குடிநுழைவு தடுப்பு முகாமிலிருந்து தப்யோடிய ரொஹிங்கிய கைதிகளில் சுமார் 80 பேர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. 65 ஆடவர்கள், எட்டு பெண்கள், ஏழு பதின்ம வயது பெண்கள் ஆகியோர் இன்னும் தலைமறைவாக இருப்பதாக கெடா போலீஸ் தலைவர் Wan Hassan Wan Ahmad தெரிவித்தார்.
தப்பியோடிய 538 கைதிகளில் 458 பேர் மீண்டும் பிடிபட்டதாக அவர் கூறினார். அவர்களில் 229 ஆடவர்கள், 89 பெண்கள், 69 பையன்கள் மற்றும் 61 பதின்ம வயது பெண்களும் அடங்குவர். தற்போது Relau குடிநுழைவு தடுப்பு முகாமில் 13 ஆடவர்கள், ஒரு பெண் மற்றும் ஒரு சிறுவன் ஆகியோர் இருந்து வருவதாகவும் Wan Hassan தெரிவித்தார்.
