
அடுத்த பொதுத் தேர்தலில் ஆளும் கூட்டணியுடன் தோல்வி அடையும் சூழ்நிலை ஏற்பட்டால் இதர கட்சிகளுடன் ஒத்துழைப்பதற்கு பக்காத்தான் ஹராப்பான் தயாராக இருப்பதாக அந்த கூட்டணியின் தலைமைச் செயலாளர் Saifuddin Nasution Ismail தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு போர்ட் டிக்சனில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தலைமைத்துவ சிறப்புக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் கூறினார். எதிர்க்கட்சிகளுடன் ஒத்துழைக்கும் வாய்ப்பை பக்காத்தான் ஹராப்பான் முழுமையாக நிராகரிக்கக்கூடாது என அமனா கட்சியின் துணைத்தலைவர் Salahuddin Ayub விடுத்துள்ள கோரிக்கை குறித்து கருத்துரைத்தபோது பி.கே.ஆர் கட்சியின் தலைமைச் செயலாருமான Saifuddin இதனைத் தெரிவித்தார்.
