
Cradel Fund நிறுவனத்தின் தலைமை செயல்முறை அதிகாரி Nazrin Hassan-ஐ கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட அவரின் மனைவி Samirah Muzaffar, இரு பதின்ம வயது பிள்ளைகளும் விடுவிக்கப்படுவார்களா அல்லது தற்காப்பு வாதம் புரிய அழைக்கப்படுவார்களா என்பது மே 30ஆம் நாள் தெரிய வரும்.
உயர் நீதிமன்ற நீதிபதி Datuk Abdul Karim Abdul Rahman அந்த தேதியை நிர்ணயித்தார். 2019 -ஆம் ஆண்டு செப்டம்பர் 6-ஆம் தேதி தொடங்கிய அந்த வழக்கு விசாரணையின் போது இதுவரை மொத்தம் 57 பேர் சாட்சியமளித்திருக்கின்றனர்.
