
வளர்ந்துவரும் நாடான மலேசியா, சீரான பொருளாதாரக் கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும் இந்த ஆண்டு 8 விழுக்காட்டு பணவீக்கத்தை சந்திக்கும் என்று பன்னாட்டு நாணய நிதியம்-IMF அவதானித்துள்ளது.
ரஷ்ய – உக்ரேனியப் போர் எரிசக்தி செலவை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வேளையில், இது, உலகளாவிய தொடர் விநியோகத்திலும் இடையூறை ஏற்படுத்தும்.
தவிர, புவிசார் அரசியல்தன்மையால் உலகில் நிச்சயமற்ற தன்மை பரவிவியரும் இந்தச் சூழலில் எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் ஏற்படும் இறுக்கமாக நிலை, பொருட்களின் விலையில் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் அந்த பன்னாட்டு அமைப்பு தெரிவித்துள்ளது.
