
நாட்டில் இரவு விடுதிகள் மீண்டும் செயல்பட ஓருவழியாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு தேசிய பாதுகாப்பு மன்றம் பட்டியலிட்டிருந்த அனுமதிக்கப்படாத துறைகள் அனைத்தும், இனி செயல்பட அனுமதிக்கப்படுமென சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
மே 15 -ஆம் தேதி தொடங்கி அவை செயல்பட அனுமதி தரப்பட்டுள்ளன. தூர இடைவெளியைக் கடைப்பிடிக்க முடியாத காரணத்தால் நாட்டில் இதுவரை இரவு விடுதிகள் செயல்பட அனுமதி தரப்படாமல் இருந்தது. எனினும் அந்த விடுதிகளில் கடைப்பிடிக்கப்பட வேண்டிய SOP –கள் வரையப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
