
சுகாதார அமைச்சு நேற்று அறிவித்த SOP தளர்வுகளை அடுத்து, மே முதலாம் தேதி தொடங்கி மாணவர்கள் அனைவரும் பள்ளிக்கூடத்திற்கு கட்டாயம் திரும்ப வேண்டும்.
தடுப்பூசி தகுதியை பொருட்படுத்தாது ஆசியர்களும் பள்ளிக்குத் திரும்பி நேரடி கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென கல்வியமைச்சர் Datuk Dr. Radzi Jidin தெரிவித்தார்.
இந்த அறிவிப்புக்குப் பின்னர், மாணவர்கள் பள்ளிக்கு திரும்பாமல் இருந்தால் , அதற்கான காரணத்தை குறிப்பிட்டு பெற்றோர் கடிதம் வழங்க வேண்டுமென அவர் கூறினார். மேலும், மாணவர்கள் பள்ளிச் சீருடையில் பள்ளிக்கூடத்திற்கு வர ஊக்குவிக்கப்படுகின்றனர். பள்ளிச்சீருடை அணிவது ஜூன் 12 -ஆம் தேதி முதல் கட்டாயம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
