
சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்ற காலம்தொட்டு தான் தேற்ந்தெடுக்கப்பட்ட தொகுதி மக்களின் வாழ்வாதாரம் சீராக செம்மையாக இருப்பதை தமது சேவையாகக் கொண்டு இதுகாறும் வலம் வந்து கொண்டிருக்கிறார் மக்கள் தலைவர் குணராஜ்.
நிலத்தில் பாடுபட்டால் இளைஞர்கள் வாழ்வில் நல்லதொரு எதிர்காலம் உருவாகும் என்னும் அடிப்படையில், நீண்ட கால நன்மை தரும் திட்டங்களை முன்னெடுத்து வெற்றி கண்டவர் மக்கள் தலைவர் குணராஜ்.

இங்கு உருவாக்கப்பட்ட விவசாய நிலத்தில் 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அயராது உழைத்த காரணத்தால் அங்கே காய்கறிகள் கரும்பு வாழை சோளம் இன்னும் பல ஊடு பயிர்களை விளைவித்து தொடர்ந்து சாகுபடி செய்து வருகின்றனர்.
செந்தோசா சட்டமன்ற த் தொகுதி இளைஞர் கள் முன்னேற்றத்திற்கும் அங்கு வாழ்கின்ற பல்லின மக்களின் வளமான வாழ்க்கை உயர்வுக்கும் முன்னோடியாக இருந்து தமது தொகுதி வளர்ச்சிக்காக அயராத உழைப்பால் பவனி வந்து கொண்டிருக்கும் மக்கள் தலைவர் குணராஜ் நடக்க விருக்கும் கெ அடிலான் கட்சியின் தேசிய உதவித் தலைவர் போட்டியில் களமிறங்கியுள்ளார். இவரின் வெற்றி யை உறுதி செய்யும் வகையில் நாடு தழுவிய அளவில் இவரது அபிமானிகளின் ஆதரவு பெருகி வருகிறது.

