
பிரதமர் Datuk Sri Ismail Sabri Yaakob-யிற்கு எதிரான சதித்திட்டத்தில் ஈடுபட்டதாக வெளியான தகவலை பெர்சத்து கட்சி மறுத்துள்ளது.
பெர்சத்துவின் உச்ச மன்றக் கூட்டத்தில் பிரதமரை மாற்றுவது குறித்து எதுவும் விவாதிக்கப்படவில்லையென அக்கட்சியின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ Ahmad Faizal Azumu தெரிவித்தார்.
பொதுத் தேர்தலுக்கு தயாராகுவதற்கான பெர்சத்துவின் ஏற்பாடு மற்றும் மலேசியாவில் விலைவாசி உயர்வு குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டதாக அவர் விவரித்தார். மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்திற்கு உதவி புரியும் வழிகள் குறித்து நாங்கள் விவாதித்தோம் எனவும் இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சருமான Ahmad Faizal தெரிவித்தார்.
