
நாட்டின் நீதி பரிபாலனத்தில் நீண்ட காலமாக தாக்கத்தை ஏற்படுத்திவரும் தியோ பெங் ஹொக்கின் மரணம் தொடர்பாக காவல்துறைக்கு எதிராக நீதித்-துறை மறுஆய்வு நடவடிக்கைகளைத் தொடங்க அவரின் குடும்பத்தினருக்கு உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இந்த வழக்கில், தியோ பெங் ஹொக் குடும்பத்தின் சார்பில் வழக்கறிஞர் ராம்கர்பால் சிங் முன்னிலை ஆனார்.
இந்த மறு ஆய்வு விசாரணையை இன்றிலிருந்து ஒரு மாதத்திற்குள் முடிக்குமாறு தேசிய போலீஸ் படைத் தலைவருக்கு நீதிமன்றத்திடம் உத்தரவிட வேண்டும் என்று தியோ பெங் ஹொக்கின் தந்தை 74 வயது Teoh Leong Hwee, தாய் 69 வயதான Teng Shuw Hoi ஆகிய இருவரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
