
குறிப்பிட்ட நாளில் கோவிட் -19 தடுப்பூசியை பெற்றுக் கொள்ள சுமார் 9 ஆயிரம் பேர் வரவில்லை.60 வயதுக்கும் மேற்பட்ட முதியோர் அதிகமானோர் முதல் மற்றும் இரண்டாவது கட்ட தடுப்பூசியை பெற்றுக் கொள்ள தவறியுள்ளனர் என பேரா மாநில சுகாதார இயக்குனர் டத்தோ டாக்டர் டிங் லாய் மிங் தெரிவித்தார்.இதில் பெரும்பாலோர் வராததால் சிரமம் ஏற்பட்டதாக சொன்னார்.இதுவரையில் சுமார் 9,009 பேர் வரவில்லை என அறிக்கையொன்றில் கூறினார்.
