
பாலிங்கில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டு, நிலச் சரிவும், சேறும் சகதியும் கரை புரண்டு ஓடி, 3 பேர் இறந்து, 1,426 பேர் நிவாரண மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த வெள்ளத்திற்கு காடு அழிப்பு, சுரங்கம் மற்றும் கல் உடைப்பு, குனோங் ஈனாசில் சிறு சிறு நீர்த் தேக்கங்கள்தான் காரணம் என்று சொல்லப்படுவதாக ஜசெக தலைவரும் டெர்கா சட்டமன்ற உறுப்பினருமான Tan Kok Yew குறிப்பிட்டார்.
இந்த வெள்ளமானது கடந்தாண்டு ஆகஸ்டில் குனோங் ஜெராய் பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் போல் இருப்பதால், கெடா சட்டமன்றக் கூட்ட நாள்களை அதிகப்படுத்தி, இவ்விவகாரத்தை முழுமையாக விவாதித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
