
அம்னோ பரிந்துரைத்துள்ள சட்டத் திருத்தம் சட்டப்பூர்வமானது என்று அதன் தலைமைச் செயலாளர் அமாட் மஸ்லான் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் 201-2021ஆம் தவணைக்கான தேர்தல் நடத்த முடியாமல் அது ஒத்தி வைக்கப்பட்டது. சிக்கலை எதிர்கொள்வதைத் தவிர்க்க கட்சித் தேர்தலைப் பொதுத்தேர்தல் நடந்து 6 மாதத்திற்குப் பின்னர், நடத்த ஏதுவாக சட்டத் திருத்தத்தைச் செய்ய மனு செய்யப்பட்டுள்ளது.
இப்போதைய செயலவை சட்டப்பூர்வமானதே என்றும் அது சிறப்புக் கூட்டங்களையும் சரவாக், மலாக்கா, ஜொகூர் ஆகிய மாநிலத் தேர்தல்களில் பங்கெடுத்துக் கொண்டிருப்பதால், அது சட்டத் திருத்ததைக் கோர உரிமை பெற்றதாக அமாட் மஸ்லான் தெரிவித்தார்.
