
நாட்டில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டுமென சுகாதார அமைச்சர் Khairy Jamaluddin அறிவுறுத்தினார்.
பூஸ்டர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாதவர்கள் 31.4 விழுக்காடும் இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளாதவர்கள் 93.94 விழுக்காட்டினரும் இருப்பதாக அவர் தெரிவித்தார்.
பல்வேறு நோய்களுக்கு ஆளானவர்கள், 60 வயதுக்கும் மேலானவர்களுக்கும் தொற்று விரைவாக பரவ வாய்பிருப்பதால், முதல் தடுபூசியைச் செலுத்திக் கொண்ட 6 மாதத்திற்குள் இரண்டாவது தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ள வேண்டிது அவசியமாகும் என்று அவர் தெரிவித்தார்.
முழுமையாகத் தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டவர்களுக்கும் இதற்கு முன்னர் தொற்று கண்டவர்களுக்கும் தொற்று பரவ வாய்ப்பிருப்பதாகவும் அவர் எச்சரித்தார்.
