
எஸ்ஆர்சி ஊழல் வழக்கில் நஜிப் ரசாக்கிற்கு விதிக்கப்பட்ட தண்டனையை சட்டத் துறைத் தலைவர் ரத்து செய்ய திட்டமிடுவதாகச் செய்தி பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி Mohd Nazlan Mohd Ghazali (நஸ்லான்) அவ்வழக்கிலிருந்து தம்மை விடுவித்துக் கொள்ளாமல் இருந்ததாகவும் நஜிப்பின் வழக்கில் நீதி கிடைக்கவில்லை என்ற காரணத்தினாலும் அத தண்டனையை ரத்து செய்யப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
அது பற்றி அறிக்கை வெளியிட்ட சட்டத் துறைத் தலைவர் Tan Sri Idrus Harun இட்ருஸ் ஹருண், அது பொய்யான செய்தி என்றும் அப்படி ஒரு முடிவு எடுக்கப்படவில்லை என்றும், நஜிப் கூட்டரசு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனு தொடர்ந்து விசாரிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார்.
