
அண்மையில் கெடா, பாலிங்கில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்திற்காக மன்னிப்பு கேட்ட மாநில மந்திரி பெசார் Muhammad Sanusi Md Nor
முகமட் சனுசி மாட் நோர், அந்த வெள்ளத்தின் காரணத்திற்கான பொறுப்பை ஏற்றுக் கொள்ள மறுத்தார்.
அந்த மன்னிப்பானது மனிதாபிமான முறையிலும் மாநில முதல்வர் என்ற அடிப்படையிலும் கேட்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
வெள்ளத்திற்குப் பலியானோருக்கு அனுதாபம் தெரிவிக்கும் வகையில் மன்னிப்பைக் கேட்டதாகவும் அதற்காக எல்லா பிரச்சினைக்கும் தாமே மூல காரணம் என ஒத்துக் கொள்ளப் போவதில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
