
இவ்வாண்டு, முதல் ஏழு மாதங்கள் நேர்ந்த 19 தடுப்புக் காவல் மரணங்களில் 17 இன்னும்
விசாரிக்கப்படுவதாக புக்கிட் அமான் செயலாளர் நூர்சியா முகமட் சாடுடின் தெரிவித்தார்
எஞ்சியிருக்கும் இரண்டில், ஒன்றில், 4 பேர் சம்பந்தப்பட்டுள்ளது கண்டு பிடிக்கப்பட்டதால், மேல் நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கும் வேளையில் மற்றொண்டு மரண விசாரணைக்கு அனுப்பப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேற்கண்ட மரணங்களில் 9 தடுப்புக் காவலிலும் 8 பேர் மருத்துவமனைகளிலும் இருவர் மருத்துவமனைகளுக்குச் செல்லும் போதும் நிகழ்ந்துள்ளன.
14 மரணங்களில் உள்ளூர்காரர்கள் சம்மந்தப்பட்டவை என்றும் எஞ்சியவை வெளிநாட்டினரை உட்படுத்தியதாக அவர் தெரிவித்தார்.
