
தமது ஊழல் வழக்குகளை ரத்து செய்ய ஜோ லோ வழங்க முன்வந்த அத்தனை இழப்பீட்டுத் தொகையையும் சட்டத்துறை அலுவலகம் மறுத்து விட்டதாகத் தெரிகிறது
மூன்றாம் தரப்பின் மூலம் தூது விட்ட ஜோ லோ, தாம் 1எம்டிபியில் இருந்து கொள்ளையடித்த 450 கோடி ரிங்கிட்டிலிருந்து 150 கோடி ரிங்கிட்டை தருவதாகப் பேரம் பேசியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நஜிப் ரசாக்கின் நெருங்கிய நண்பரான ஜோ லோ 1எம்டிபி நிறுவனத்தின் பணத்தில் இருந்து 450 கோடி ரிங்கிட்டைக் களவாடிய பின்னர், தண்டனைக்குப் பயந்து பல நாடுகளிலும் ஒளிந்து வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
