
அண்மையில் தொழிலாளர்களை அனுப்புவதில் இந்தோனேசியா தற்காலிகத் தடையை ஏற்படுத்தி இருப்பதால், நாட்டில் உள்ள தொழில் துறைகளில் ஆள் பற்றாக் குறையினால் பிரச்சினை பூதாகரமாக வெடித்துள்ளதாக லிம் குவான் எங் குறிப்பிட்டார்.
இப்பிரச்சினையைத் தீர்ப்பதில் மனிதவள அமைச்சர் சரவணனனும் உள்துறை அமைச்சர் ஹம்சா ஸைனுடினும் சரிவர இயங்காமல் அதில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.
நாட்டில் தொழிலாளர்கள் பற்றாக்குறை கடுமையான நிலையை எட்டியிருப்பதால், தொழில்துறைகள் முடங்கும் நிலை வரக்கூடும். பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேரடியாகவே இந்தோனேசிய அதிபர் ஜோக்கோ விடோடோவுடம் பேசி பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்று குவான் எங் அறிவுறுத்தியுள்ளார்.
