
அதிகமான பிரச்சினைகள் நாட்டில் உருவாகி இருப்பதால், அதனைப் பயன்படுத்தி 15ஆவது பொதுத் தேர்தலில் ஆட்சியைப் கைப்பற்ற வேண்டுமென்று பிகேஆரின் தலைமைச் செயலாளர் சைஃபுடின் நசுத்தியோன் அறைகூவல் விடுத்தார்.
கட்சியின் காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் பேசிய சைபுடின், நாடு மேலும் அழியாமல் இருப்பதற்கு பிகேஆர் ஆட்சியைக் கைப்பற்றும் வகையில் எல்லாத் தரப்பட்ட உறுப்பினர்களும் அர்ப்பணிப்புடன் ஈடுபடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பிகேஆர் அனைவரையும் அரவணைத்து கட்சியில் புதிய ரத்தம் பாய்ச்சி, அதற்கான நடவடிக்கையை இப்போதே தொடங்க வேண்டுமென்றும் அவர் வலியுறுத்தினார்.
