
ஜோ லோவின் வழக்கறிஞர் சட்டத் துறைத் தலைவரை மர்மமான முறையில் சந்திக்க ஏற்பாடு செய்த முன்னாள் சட்டத்துறைத் தலைவர் அபாண்டி அலி கடும் கண்டனத்திற்கு உள்ளானார்..
1எம்டிபியிந் முறைகேடு வழக்குகளைத் தள்ளுபடி செய்ய பேரம் பேசப்பட்டதாகவும் அது எக்காரணத்தினாலோ முடிவெடுக்கப்படாமல் விடப்பட்டதாக அபாண்டி கூறியியிருக்கிறார்.
அந்த சந்திப்பை ஏற்பாடு செய்ய அபாண்டி எவ்வளவு தொகையைப் பெற்றார் என்பது பற்றி விளக்க வேண்டுமென ராம் கர்பால் கேட்டுக் கொண்டார்.
பணத்தைப் பெற்றுக் கொண்டு ஜோ லோவின் வழக்குகளைத் தள்ளுபடி செய்வது நேர்மையற்றது, சட்டத்துக்கு விரோதமானது என்றும் அவர் சாடினார்.
