
தென்கிழக்காசியாவில் பல நாடுகளுக்கு போதைப்பொருளை விநியோகித்து வந்த மூவரில் கிங் என்று சொல்லப்படும் கிம் என்பவனை வியட்நாம் அந்நாட்டை விட்டு நாடு கடத்தியுள்ளது.
அனைத்துலகப் போலீசாரின் சிவப்பு அறிக்கையைப் பெற்ற அவன் Ho Chi Minh (ஹோ சீ மின்0 நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழகை கைது செய்யப்பட்டான்.
கிம் ஆண்டுக்கு 700 கோடி வோன் (53 லட்சம் டாலர்) மதிப்பிலான போதைப் பொருளை 20 நாடுகளுக்குக் கடத்தி விநியோகித்து வந்ததாகப் போலீசார் தெரிவித்தனர்.
மேலும், அங்குள்ள இன்னும் இரண்டு போதைப்பொருள் விநியோகஸ்தர்களுக்கும் அவன் அதனை அளித்து வந்துள்ளதாகவும் தெரிகிறது.
