
சூலு சுல்தான் வாரிசுகள் பெட்ரோனாஸின் இரு துணை நிறுவனங்களைக் கையகப்படுத்திய விவகாரத்தை மக்களவையில் விவாதிக்க அனுமதி மறுத்த பின்னர், Kota Belut(கோத்தா பெலுட்) வாரிசான் எம்பி Inaraisa Munira Majilis (இனாரைசா முனிரா மாஜிலிஸ்) மக்களவையில் இருந்து 2 நாள்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார்.
அந்த விவகாரத்தை அனுமதிக்க வேண்டுமென்று அவர் விடாப்பிடியாக வலியுறுத்தியதைத் தொடர்ந்து, அவருக்கும் சபாநாயகர் அஸார் அஸிஸான் ஹருணுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நபாநாயகர் அவையிலிருந்து வெளியேறினார்.
அதன் பின்னர், துணை சபாநாயகர் Mohd Rasjid Hasnon (முகமட் ரஷிட் ஹஸ்னோன்), இனாரைசாவை இரண்டு நாள்களுக்கு இடைநீக்கம் செய்து உத்தரவிட்டார்
