15ஆவது பொதுத்தேர்தலில் பினாங்கை தேசிய முன்னணி கைப்பற்றுவது குதிரைக் கொம்பு என அறிவியல் பல்கலைக்கழகப் பேராசிரியர் Azeem Fazwan Ahmad Farouk (அஸீம் ஃபஸ்வான் ஃபரூக்) குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பினாங்கு சட்டமன்றத்தில் பக்காத்தானுக்கு மொத்தம் 33 தொகுதிகள் இருக்கின்றன. அதில் ஜசெகவுக்கு 18, பிகேஆருக்கு 12, அமானாவுக்கு 2 தொகுதிகள் இருக்கும்போது 2018இல் தேசிய முன்னணி வெறும் 5 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.
தேசிய முன்னணிக்கு மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக இருக்கும் ஒன்றிரண்டு தொகுதிகளில் மட்டுமே வெற்றி வாய்ப்பு இருக்கும்போது அது பினாங்கின் ஆட்சியைக் கைப்பற்றுவது என்பது பகல் கனவாகும் என அவர் குறிப்பிட்டார்