
மலாக்கா, Sungai Udang சிறைச்சாலையில் இருந்து, 30 கைதிகள் தப்பியோடினரா? அவ்வாறு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருக்கும் தகவல் பொய்யானது என Melaka Tengah மாவட்ட போலீஸ் தலைவர் Christopher Patit தெரிவித்தார். மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்தக் கூடிய அந்த தகவலை பொது மக்கள் நம்ப வேண்டாம். மேலும் அந்த பொய் தகவல் குறித்து Sungai Udang சிறைச்சாலை அதிகாரிகள் போலீசில் புகார் செய்யவிருப்பதாகவும் அவர் கூறினார்.
