
நாட்டில் 5 லட்சம் சிறார்களுக்கு இன்னும் கோவிட் தடுப்பூசி செலுத்தப் படவில்லை என்று மக்களவையில் தெரிவிக்கப்பட்டது. 5 வயதுக்கும் குறைவான சிறார்கள் 264,750 பேருக்குத் தடுப்பூசி செலுத்தப்படவில்லை. அதே வேளையில் 5லிருந்து 11 வயதுக்குட்பட்ட 1,777,078 சிறார்களுக்கு குறைந்தபட்சம் ஒரு முறைக்கான தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 1,495,285 சிறார்கள் இரு முறைக்கான தடுப்பூசியைச் செலுத்திக் கொண்டுள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொண்ட 500 பேருக்கு எதிர்மறையான விளைவுகளும் 31 பேர் கடுமையான விளைவுகளுக்கும் ஆளாகியுள்ளனர்.
