
2 லட்சம் முதலீட்டில் தொடங்கப்பட்டு மொத்தம் 4.7 மில்லியன் ரிங்கிட் நட்டத்தில் இயங்கும் வேவ்பே சிஸ்டம் எனும் நிறுவனத்தில் சிலாங்கூர் அரசு 1 கோடி ரிங்கிட்டை முதலீடு செய்தது கண்டனத்துக்கு ஆளாகியுள்ளது. நட்டத்தில் இயங்கும் அந்த நிறுவனத்தில் 1 கோடி ரிங்கிட்டைச் செலுத்தி 49 விழுக்காட்டுப் பங்குகளை வாங்கியிருக்கும் சிலாங்கூர் அரசு, அந்த நிறுவனத்தைத் தனது கட்டுப்பாட்டில் வைக்க முடியாது இருப்பதாக அவர் குறிப்பிட்டார். நிலைமை இப்படி இருக்கும் போது, அதில் என்ன லாபம் அடைய முடியும் என்று கோம்பாக் செத்தியா சட்டமன்ற உறுப்பினர் Hillman Idamm (ஹில்மான் இடாம்) கேள்வி எழுப்பினார்.



