
எஸ்ஆர்சி வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட 12 ஆண்டு சிறைத் தண்டனை, 21 கோடி ரிங்கிட் அபராதத்தை எதிர்த்து நஜிப் ரசாக் கூட்டரசு நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தார். இதனிடையே, தமது வழக்கறிஞர்களை நஜிப் மாற்றியுள்ளதால், புதிய வழக்கறிஞர்கள் வழக்கை முழுமையாகப் புரிந்து கொள்ள கால அவகாசம் தேவைப்படுவதால், வழக்கை ஒத்தி வைக்க நஜிப் கோரிக்கை விடுத்திருந்தார். அந்த மனுவை விசாரித்த கூட்டரசு நீதிமன்றம் அவரின் மனுவைத் தள்ளுபடி செய்து, மேல்முறையீட்டு வழக்கு திட்டமிட்டபடி ஆகஸ்டு 15ஆம் தேதியிலிருந்து 10 நாள்களுக்கு நடைபெறும் என்று அறிவித்தது.
