26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

சிலாங்கூர் மாநில ஐந்தாண்டு திட்டம் வரவேற்கத்தக்கது

சிலாங்கூர் அரசு சட்டமன்றத்தில் தாக்கல் செய்த சிலாங்கூர் மாநில ஐந்தாண்டு மேம்பாட்டுத் திட்டத்தை தாம் வரவேற்று சிலாங்கூர் சட்டமன்றத்தில் பேசியதாகக் குறிப்பிட்டார் செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ். அவர் மேலும் கூறும்போது, நாடே கோவிட் தொற்றிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும்போது. மாநில மேம்பாட்டுக்கும் மக்களின் நல்வாழ்வுக்காகவும் இந்த ஐந்தாண்டுத் திட்டத்தை அரசு துணிவுடன் தாக்கல் செய்திருப்பது ஒரு பொறுப்புள்ள அரசின் கடமையை உணர்த்தியிருப்பதாக அவர் தெரிவித்தார். அத்திட்டத்தில் தாம் பண்டார் போட்டானிக் தடாகம், பண்டார் புக்கிட் திங்கி வர்த்தக வளாகம், தாமான் செந்தோசா மார்க்கெட், நெடுஞ்சாலைத் திட்டத்தால் பாதிக்கப்பட்ட கம்போங் ஜாவா மக்களுக்கான இழப்பீடு போன்றவற்றை பரிந்துரைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles