
அம்னோவின் தேர்தலை பொதுத்தேர்தலுக்குப் பின்னர் ஒத்திவைக்கக் கோரும் விண்ணப்பத்தை சங்கங்களின் பதிவகம் நேற்று அங்கீகரித்தது. இந்த அங்கீகாரத்தின் வழி கட்சித் தேர்தலைப் பொதுத் தேர்தல் முடிந்த பின்னர், 6 மாதத்திற்கு ஒத்தி வைக்க முடியும். இதற்கு முன்னர் அம்னோ கோவிட்டை காரணம் காட்டி கட்சித் தேர்தலை 18 மாதங்களுக்கு ஒத்தி வைத்தது. அந்தக் காலவரம்பு ஜுலை 31ஆம் தேதியோடு முடிவடைகிறது.
