
அரசுக்கும் பக்காத்தான் ஹராப்பானுக்கும் இடையிலான நல்லிணக்க ஒப்பந்தம் இன்னும் நடப்பில் இருப்பதாக பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். ஜூலை 31ம் தேதிக்கு முன்னதாக நாடாளுமன்றம் கலைக்கப்படக் கூடாது என்ற அம்சம் தற்போது இல்லையென்றும் ஒப்பந்தத்தின்படி நாடாளுமன்றம் கலைக்கப்பட்ட பின்னரே ஒப்பந்தம் முடிவுக்கு வருமென்றும் அவர் தெரிவித்தார். சில தரப்பினர் பொதுத்தேர்தலை நடத்த துடியாய் துடிப்பதானது தாங்கள் எதிர்நோக்கும் ஊழல் வழக்குகளில் இருந்து தப்பிக்கவே என்றும் அன்வார் தெரிவித்தார்.
