
தமக்கு எதிராக நடந்து கொண்டவர்கள் மீது பழிவாங்கும் நோக்கம் தமக்கில்லை என்று அம்னோ தலைவர் Ahmad Zahid Hamidi (அமாட் ஸாஹிட் ஹமிடி) தெரிவித்தார். வரும் பொதுத்தேர்தலில் எதிரான போக்கு கொண்டவர்களை ஒதுக்கும் போக்கைக் கடைபிடிக்கப் போவதில்லை என்று அவர் தெரிவித்தார். தாம் மன்னிக்கத் தயாராக இருப்பதாகவும் ஆனால், எதையும் மறக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார். 14ஆவது பொதுத்தேர்தலுக்குப் பின்னர், அம்னோவை கைவிட்டுச் சென்றவர்களுக்குப் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரப்படாது என்று அவர் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
