26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

ஆள் பற்றாக்குறையை நிவர்த்திக்க ஐநா அகதிகளுக்கு வேலை தரலாம்

தொழில்துறையில் நிலவும் கடுமையான தொழிலாளர் பற்றாக் குறையை நிவர்த்திக்க இங்கு இருக்கும் 180,000 ஐநா அகதிகளுக்கு வேலை வாய்ப்பைத் தரலாம் என்று முதலாளிமார் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் Syed Husein syed Husman (சைட் ஹுசேய்ன் சைட் ஹுஸ்மான்) பரிந்துரைத்தார். தோட்டத் தொழில் துறையில் இதுவரை செம்பனைப் பழம் அறுவடை செய்ய முடியாமல் 3,200 கோடி ரிங்கிட் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். நாட்டுக்கு 12 லட்சம் அந்நியத் தொழிலாளர்கள் தேவைப்படுவதாகவும் அதில் தோட்டத் துறைக்கு 120,000 பேரும் கட்டுமானத் துறைக்கு 650,000 பேரும் தேவைப்படுகின்றனர் ஐநா அகதிகள், அரசியல் அடைக்கலம் தேடி வந்தோர், ஆவணமற்றோர், கைதிகள் போன்றோரை தொழில்துறை வேலைகளுக்கு பயன்படுத்த அனுமதிக்க வெண்டுமென சைட் ஹுசேன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles