
மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் மலாக்காரர் அல்லாதோருக்கு 10 விழுக்காடு இடம் அளிக்கப்படுகிறதா என்பதை கல்வி அமைச்சு உறுதி கூற வேண்டுமென பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி.ராமசாமி வலியுறுத்தியுள்ளார். இவ்வாண்டு எஸ்பிஎம் தேர்வில் எல்லாப் பாடங்களிலும் ஏ பெற்ற 200க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்களுக்கு இடம் வழங்கப்படாதது ஏன் என்று கல்வியமைச்சர் ராட்ஸி ஜிடின் தெளிவுபடுத்த வேண்டுமென ராமசாமி அறிவுறுத்தியுள்ளார்.
