26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

சீன விண்வெளி ராக்கெட்டின் பாகங்கள் சரவாக்கின் வான்வெளியைக் கடந்து சென்றன

சீனாவின் லாங் மார்ச் 5பி ராக்கெட்டில் இருந்து சிதறிய பாகங்கள் பூமியின் வான்வெளியில் மீண்டும் நுழைந்தது நள்ளிரவு 12.55 மணிக்கு (ஜூலை 31) கண்டறியப்பட்டதாக மலேசிய விண்வெளி நிறுவனம் (மைசா) தெரிவித்துள்ளது. மைசா அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க அமைச்சகத்தின் தொடர்ச்சியான கண்காணிப்பு மற்றும் சீன விண்வெளி நிறுவனத்தின் அறிக்கையின் மூலம் பூமியின் வான்வெளியில் நுழையும் போது ராக்கெட்டில் இருந்து சிதறிய பாகங்கள் தீப்பிடித்ததாகவும், எரியும் பாகங்களின் நகர்வு சரவாக்கின் வான்வெளி உட்பட பல பகுதிகளில் கடந்ததாகவும் கண்டறியப்பட்டது. “மீதமுள்ள எரிந்த பாகங்கள் சூலு கடலைச் சுற்றி விழுவது பதிவு செய்யப்பட்டுள்ளது, இது அட்சரேகை 9.1 டிகிரி வடக்கு மற்றும் 119.0 டிகிரி கிழக்கு தீர்க்கரேகை க்கு இடைப்பட்ட பகுதி,” என்று மைசா இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles