26.4 C
Kuala Lumpur
Monday, April 27, 2026

Vetri

ஜொகூரில் கடனாளிகள் ஆலோங்கிற்கு அடிமைகளாக வேலை செய்கின்றனர்

ஜொகூர் பெலாங்கி, இஸ்கண்டார் புத்ரி ஆகிய பகுதிகளில் போலீசார் நடத்திய சோதனை நடவடிக்கையில் ஆலோங் வட்டி முதலைகளிடம் வேலை செய்து வந்த 9 பேர் கைது செய்யப்பட்டனர். வாங்கிய கடனைச் செலுத்த முடியாதோரின் வீடுகளில் தீ வைப்பது, சாயத்தைக் கொட்டுவது போன்ற அநாகரிகக் காரியங்களில் அவர்கள் ஈடுபட்டிருப்பதாக ஜொகூர் போலீஸ் தலைவர் கமாருல் ஸமான் மாமாட் தெரிவித்தார். கைது செய்யப்பட்டவர்கள் 19லிருந்து 46 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அவர்கள் இதற்கு முன்னர் வட்டி முதலைகளிடம் கடன் வாங்கி, அதனைச் செலுத்த முடியாததால், வட்டி முதலைகளுக்குச் சேவகம் புரிந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டதாக கமாருல் ஸமான் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles