
நாட்டில் கடந்த 7 மாதங்களில் தடூப்புக் காவலில் இருந்த 19 பேர் மரணமடடைந்துள்ளனர். இது மிகவும் வருத்தமளிப்பதாக பிரபல வழக்கறிஞர் Muhamad Hanid Khathri (முகமட் ஹனிஃப் கத்ரி) குறிப்பிட்டார். அந்த மரணங்களுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதன் உண்மையான காரணம் வெளிக் கொணரப்படுவதில்லை. தடுப்புக்காவலில் இருக்கும் கைதிகளுக்குப் போலீசாரே அரணாக இருக்க வேண்டும். ஆனால், உண்மையில் நடப்பதோ வேறு விதமாக உள்ளதாக அவர் குறிப்பிட்டார். இந்த மரணங்கள் நேர்வதற்கு கைதிகளை விசாரணை என்ற பெயரில் அராஜமாக சித்ரவதை செய்யப் படுவதால் தான் என்று போலீசாரின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. இதனைத் தடுக்க அரசு தக்க நடவடிக்கையை எடுக்கத் தவறினால், தடுப்புக் காவல் மரணங்கள் தொடர் கதையாகவே இருக்கும் என்று எச்சரிக்கப்படுகிறது.



