
அண்மையில் மேம்பாலம் ஒன்றிலிருந்து 3 பிள்ளைகளைத் தூக்கி எறிந்து விட்டு, மியன்மார் அகதி ஒருவர் தாமும் குதித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அகதிகளாக அடைகலம் தேடி வருவோருக்கு மிகுந்த கட்டுப்பாடு, சுதந்திரமாகச் செல்ல முடியாமை, வேலை செய்யத் தடை, குடும்பத்துக்கு உணவை அளிக்க முடியாமை, சுகாதார, கல்வி வசதிகள் இல்லாது அகதிகள் இக்கட்டில் இருப்பதால் வேறு வழியில்லாமல் அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முனைவதாகப் பரவலாகச் சொல்லப்படுகிறது. எனவே, ஐநா சாசனத்திற்கு இணங்க அகதிகள் கெளரமாக வாழ, அவர்கள் இங்கே வேலை செய்து குடும்பத்தைக் காப்பாற்ற அனுமதிக்க வேண்டுமென Beyond Borders (பியோன் போர்டர்ஸ்) , Chin Refugees (சின் அகதி) களுக்கான அமைப்பு ஆகியவை கேட்டுக் கொண்டுள்ளன.



