
பிரேக் பிடிக்காததால் , சாலையில் எட்டு வாகனங்களை மோதித் தள்ளியிருக்கின்றார் லாரி ஓட்டுநர் ஒருவர். அந்த சம்பவம் நேற்று மாலை, பூச்சோங்- புக்கிட் ஜாலில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்தது . சம்பவத்தின் போது , வாகன நெரிசலால் வாகனங்கள் மெதுவாக நகர்ந்துக் கொண்டிருந்தன. அப்போது பிரேக்கில் ஏற்பட்ட பிரச்சனையால், முன்னிருந்த 8 வாகனங்களை , கற்களை ஏற்றியிருந்த லாரி மோதித் தள்ளியதாக, செர்டாங் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் இசுடின் அப்துல் வாஹாப் (Izuddin Ab Wahab) தெரிவித்தார். விபத்தை ஏற்படுத்திய சம்பந்தப்பட்ட 34 வயது லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.



