
தாம் அரசின் ஊழியராக சேவை செய்திருப்பதால் தமது கடமையை எதிர்த்து வழக்கைத் தாக்கல் செய்ய முடியாது என்று முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பக்காத்தான் காலத்தில் சட்டத் துறைத் தலைவராக இருந்த டோமி Asian International Arbitration Centre (AIAC)ஆசிய இண்டர்நேஷனல் சமரச மையத்தின் இயக்குநராக இருந்த என்.சுந்தர ராஜு, அந்த மையத்தில் 1.1மில்லியன் ரிங்கிட்டை முறைகேடு செய்ததால், அவர் மீது நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவித்தார். அரசின் ஊழியராக சட்டத்தைக் காக்கவும், அரசியலமைப்பு விதி அளித்த அதிகாரத்தைக் கொண்டு சட்ட நடவடிக்கையை எடுத்ததாகவும், அது தனிப்பட்ட விரோதம் காரணமாக இல்லையென்றும் டோமி தெரிவித்தார்.
