
சிலாங்கூர் , கெடா உட்பட ஆறு மாநிலங்களில் பருவ மழைக் காலம் முழுவதிலும் வெள்ள பேரிடரை எதிர்நோக்குவதற்கு தீயணைப்பு மீட்புத்துறை தயாராய் உள்ளது. கிழக்குக் கரையில் இரு மாநிலங்களுடன் சபா மற்றும் சரவாக் மாநிலங்களிலும் மோசமான வெள்ளம் ஏற்படும் சாத்தியம் உள்ளது. எனவே அந்த மாநிலங்களில் வெள்ளத்தின்போது தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் நடவடிக்கையில் தீவிர கவனம் செலுத்தும் என தீயணைப்பு மீட்புத்துறையின் தலைமை இயக்குனர் டத்தோஸ்ரீ முகமட் ஹம்டான் வாஹிட் ( Mohamad Hamdan Wahid ) தெரிவித்திருக்கிறார்.
