
அண்மையில் நிதியமைச்சர் Tengku Zafrul Aziz (தெங்கு ஸப்ருல் அஸிஸ்) சிலாங்கூர் அம்னோ பொருளாளர் பதவியேற்று, வரும் பொதுத்தேர்தலில் கோலசிலாங்கூர் தொகுதியில் போட்டியிட்டு மந்திரி பெசாராக நியமிக்கப்பட உள்ளார் என கூறப்படுகிறது. முஹிடின் யாசின் அவரை நிதியமைச்சராக நியமித்த பின்னர், இப்போது அவர் அம்னோவில் இணைந்துள்ள செயலானது பெர்சத்து தலைவர்கள் அக்கட்சியின் மீது நம்பிக்கை இழந்து, அதிலிருந்து அகல முற்படுவது தெளிவாகத் தெரிவதாக ஜொகூர் அம்னோ துணைத் தலைவர் Nur Jazlan (நூர் ஜஸ்லான்) குறிப்பிட்டார். பாஸ் கட்சி சந்தர்ப்பவாதக் கட்சி என்றும் இனம், சமயத்தைப் பயன்படுத்தி அரசியல் ஆதாயம் தேட நினைப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
