
ஜோ லோவின் ஆலோசனையின் பேரில் திரெங்கானு முதலீட்டு நிறுவனத்தை அமைக்க சுல்தானா முயலவில்லை என்று திரெங்கானுவின் முன்னாள் மந்திரி பெசார் Ahmad Said (அமாட் ஸைட்) நீதிமன்றத்தில் தெரிவித்தார். அரசாங்க நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே சுல்தானா Nur Zahirah (நூர் ஸஹிரா) கலந்து கொள்வார் என்று அரசின் நிர்வாகத்தில் அவர் தலையிட்டது இல்லையென்றும் சுல்தானா சரவாக் ரிப்போர்ட்டின் ஆசிரியர் Clare Rewcastle Brown (கிளேர் ரியூகாசல் பிரெளன்) மீது தொடுக்கப்பட்ட மானநட்ட வழக்கில் சாட்சியமளிக்கையில் அவர் இதனைத் தெரிவித்தார். தமக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கத்தில் அவதூறான செய்தியை வெளியிட்ட ரியூ காசல் மீது 10 கோடி ரிங்கிட் இழப்பீடு வழக்கை சுல்தானா தாக்கல் செய்து அந்த வழக்கு இப்போது உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
