
மலேசியாவுக்கு வரும் சுற்றுப்பயணிகளிடம் இனி கோவிட் பரிசோதனை செய்யப்பட மாட்டாது. ஆகஸ்டு 1 முதல் பயணத்திற்கு முன்னரும், நாடு வந்து சேர்ந்ததும் மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் இனி மேற்கொள்ளப்படாது என சுகாதாரத் தலைமை இயக்குநர் டாக்டர் Noor Hisham Abdullah (நூர் ஹிஷாம் அப்துல்லா) தெரிவித்தார். எனினும் பயணிகளுக்குத் தடுப்பூசியைக் கட்டாயப்படுத்தும் நடைமுறை விமான நிறுவனங்களைப் பொறுத்ததாகும். பயணிகள் தங்களின் உடல் நிலையைக் கண்காணிக்க வேண்டுமென்றும் கோவிட் அறிகுறி எதுவும் தென்பட்டால், அதற்கான நடவடிக்கையை எடுத்துக் கொள்ள வேண்டுமென்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
