
சுங்கை பூலோ மருத்துவமனைக்கு கிரேப், ஃபூட் பண்டா உணவு விநியோகத்திற்கு நிர்வாகம் தடை விதித்ததை ஒப்பந்த மருத்துவர்களின் ‘ஹர்த்தால் டாக்டர் கொன்ட்ராக்ட் இயக்கம் கடுமையாகச் சாடியுள்ளது.
மருத்துவமனை நிர்வாகம் பசி என்பதை உணராமல் இது சம்பந்தமான சுற்றறிக்கையை வெளியிட்டிருப்பதாகவும் மருத்துவர்கள் மிகை வேலை நேரத்தில் வெளியே சென்று உண்ண முடியாமல், வெளியில் இருந்து உணவைத் தருவித்து வருதாகக் குறிப்பிட்டுள்ளது. நிர்வாகத்தின் இந்த அராஜகப் போக்கு தவிர்க்கப்பட வேண்டுமென அது கேட்டுக் கொண்டுள்ளது.
வெளியில் இருந்து மருத்துவர்களும் நோயாளிகளும் உணவை தருவிப்பதால், மருத்துவமனை வளாகத்தில் அசுத்தம் ஏற்படுவதாகவும் அதனால், எலித் தொல்லை ஏற்படுவதாகவும் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
