
2018ஆம் ஆண்டு பொதுதேர்தலுக்காக அமாட் ஸாஹிட் ஹமிடி 3 மில்லியன் ரிங்கிட்டைப் அல்ட்ரா கிராணா நிறுவனத்திடமிருந்து பெற்றதாக அவரின் ஊழல் வழக்கில் எம் ஏசிசி புலன் விசாரணை அதிகாரி வி. மகேந்திரன் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
2015லிருந்து 2017ஆம் ஆண்டு வரை ஸாஹிட் 6 தவணகளில் அந்தப் பணத்தைப் பெற்றதாகவும் அவை காஜாங் கண்றி ஹைட்ஸில் உள்ள அவரது வீட்டில் ரொக்கமாகத் தரப்பட்டதாகவும் மகேந்திரன் தனது சாட்சியத்தில் தெரிவித்தார்.
மேலும், மேற்கண்ட நிறுவனத்திடமிருந்து 2014இல் இருந்து 2018ஆம் ஆண்டு வரை ஸாஹிட் ஹமிடி மாதத்திர தவணைப் பணமாக மொத்தம் ஒரு கோடியே முப்பத்தைந்து லட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட்டைப் பெற்றதாக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு, அதன் வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.
