
ஜொகூரில் தற்போது நடைமுறையில் உள்ள வெள்ளி, சனிக்கிழமை நாள்களில் அனுசரிக்கப்படும் வார இறுதி நாள்களை மாற்றுவதற்கான பரிந்துரையை ஜோகூர் சுல்தானிடம் வழங்கப்படும்.
அது சம்பந்தமான பலரின் கருத்துகள் அடங்கிய அறிக்கை சுல்தான் இப்ராஹிம் இப்னி சுல்தான் இஸ்கண்டாரிடம் ஒப்படைக்கப்படும் என்று மந்திரி பெசார் ஓன் ஹஃபீஸ் காஸி தெரிவித்தார்.
பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, வார ஓய்வு நாள்களை சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்ற பொரும்பாலோர் விரும்புவதாக அவர் குறிப்பிட்டார்.
